நெல்லுக்கு இறைத்தநீர்
வாய்க்கால் வழிஓடிப்
புல்லுக்கும் ஆங்கே
புசியுமாம் . தொல்லுலகில் ,
புல்லானப் பலமொழியை
பூந்தமிழில் புகுத்தலாமோ
நெல்லான நம்மொழியின்
நெஞ்சத்தை உறுத்தலாமோ
விழிகளிலே பழுதென்றால்
வேறுவிழி பொருத்திடலாம்
தமிழ்மொழியில் பழுதென்றால்
எவ்வாறு தடுத்திடலாம்
ஒண்டவந்த பிடாரியெல்லாம்
ஊர்பிடாரியை விரட்டிடுமாம்
ஒண்டமிழின் புகழைக்கூட
அதுபோலக் கெடுத்திடுமாம்
அண்டவிட வேண்டாமே
அருந்தமிழைக் காத்திடுவோம்
வண்டமிழின் சோலைதனில்
வண்ணமாகப் பூத்திடுவோம்
தாய்மொழியும் நாய்மொழியும்
தரத்தினிலே ஒன்றிடுமா
வாய்மொழியாய் வந்ததெல்லாம்
வள்ளுவத்தை வென்றிடுமா
கற்றிடலாம் பலமொழிகள்
கற்பதிலே குறையுமில்லை
நற்றமிழில் நடவுசெய்தல்
நியாயமென்ன சொல்லிடுவீர்
உண்டிதனில் கலப்படங்கள்
உண்டவர்க்கு நஞ்சாகும்
அண்டிவரும் அயல்மொழியால்
அனைத்தமிழ் அழகுகெடும்
செங்குருதி ஓட்டத்திலும்
சிலவேறு பிரிவுஉண்டு
அங்கேனும் கலப்படத்தால்
அப்பொழுதே உயிர்பிரியும்
பைந்தமிழில் நுழைந்துள்ள
பார்த்தீனியக் களையெடுப்போம்
நைந்துவிடா நம்தமிழை
நாள்தோறும் நாம்வளர்ப்போம் .
ஞாயிறு, 27 நவம்பர், 2011
ஞாயிறு, 13 நவம்பர், 2011
நூலகம் ஓர் ஆலயம் .
நூலகமும் ஆலயமும்
ஒன்றிணைந்த திருவடிவாய்
வேலனவன் தமிழ்மொழியை
வேய்ந்துவைத்த மன்னவராம்
ஞாலமெலாம் போற்றுகின்ற
ஞானமொழி சொன்னவராம்
காலமெல்லாம் கவிவடிக்கும்
வீரபாண்டித் தென்னவராம்
தலைமைக்கு முதல்வணக்கம்
தகையோர்க்கும் தலைவணக்கம்
கலைபடிக்கும் நூலகத்தின்
கதவுகளைத் திறப்போமா
ஆறில்லா ஊருக்கு
அழகதுவும் பாழென்று
அறிவுருத்திச் சென்றாளே
ஔவையவள் மூதாட்டி
ஊருக்கு அழகென்றால்
ஒருஆறு போதுமங்கே
தேருக்கு அழகென்றால்
தெய்வமது வேண்டுமங்கே
தெய்வங்கள் உறைந்திருக்கும்
திருவிடங்கள் பலவும்உண்டு
மெய்யதுவும் கோவிலாகும்
மேன்மையினை அறிந்திடுவீர்
பொய்மைதனை நீக்கிடவே
பொறையின்றி கற்றிடுவீர்
உய்வதற்கு முன்னாலே
உயர்வுநிலை எட்டிடுவீர்
கண்ணிற்குத் தெரியாத
கடவுளர்கள் கற்சிலையில்
மண்ணிலே உலவிவரும்
மகத்துவத்தை அறிவீரோ
அன்பே சிவமென்றால்
அறிவன்றோ தெய்வமாகும்
முன்பதனை வழிமொழிந்து
மூத்தவர்கள் சொல்லிவைத்தார்
அன்பினாலே அனுதினமும்
ஆலயங்கள் செல்வோரே
பண்பதனை அறிந்திடவே
பாடசாலை சென்றிடுவீர்
மலர்விட்டு மலர்தாவி
மகரந்தம் தனைநீவி
உலர்வதற்கு முன்னாலே
உள்கூட்டில் சேர்த்திடுமாம்
சிறுதேனி ஆனாலும்
சிந்தையெல்லாம் தினந்தேடல்
ஒருநாளும் சோர்வுயில்லை
ஒலித்திடுமே குறும்பாடல்
ஈயாத தேட்டையெல்லாம்
தீயவர்கள் கொள்வாராம்
ஈவதற்கு இங்குண்டு
இயன்றவர்கள் எடுத்திடுவீர்
திரட்டிவைத்த தேன்கூடாய்
திரவியங்கள் பலவுமுண்டு
புரட்சிகளின் வரலாறும்
புதையலாக இங்குண்டு
அறிவையெல்லாம் அடைகாக்கும்
ஆலயத்தைக் கண்டிடுவீர்
அறிந்தவர்கள் அதன்சிறப்பை
அனைவருக்கும் சொல்லிடுவீர்
புறமெல்லாம் நூற்பதற்கு
பூவுலகில் கோடியுண்டு
அகமதனை நூற்பதற்கு
நூலகமே தேவைஇன்று
அர்சனைகள் இங்குஇல்லை
அபிசேகம் தேவையில்லை
அனுமதியாய் சிறப்புச்சீட்டு
அலுவலர்கள் தருவதில்லை
சாதிமத பேதமில்லை
சடங்குகளும் நடப்பதில்லை
நீதிஒன்றே சாமிஇங்கு
நிந்தனைகள் ஏதுமில்லை
மதங்கள்கூட தடையுமில்லை
மனிதநேயம் சுடவுமில்லை
உதயமதை வேண்டுவோர்கள்
உளமுடனே சென்றிடலாம்
ஆலயமும் தொழுவதென்றால்
அதுவன்றோ சாலமாகும்
நூலகமும் ஆலயமே
நூல்படிக்கச் செல்லலாமா .
ஒன்றிணைந்த திருவடிவாய்
வேலனவன் தமிழ்மொழியை
வேய்ந்துவைத்த மன்னவராம்
ஞாலமெலாம் போற்றுகின்ற
ஞானமொழி சொன்னவராம்
காலமெல்லாம் கவிவடிக்கும்
வீரபாண்டித் தென்னவராம்
தலைமைக்கு முதல்வணக்கம்
தகையோர்க்கும் தலைவணக்கம்
கலைபடிக்கும் நூலகத்தின்
கதவுகளைத் திறப்போமா
ஆறில்லா ஊருக்கு
அழகதுவும் பாழென்று
அறிவுருத்திச் சென்றாளே
ஔவையவள் மூதாட்டி
ஊருக்கு அழகென்றால்
ஒருஆறு போதுமங்கே
தேருக்கு அழகென்றால்
தெய்வமது வேண்டுமங்கே
தெய்வங்கள் உறைந்திருக்கும்
திருவிடங்கள் பலவும்உண்டு
மெய்யதுவும் கோவிலாகும்
மேன்மையினை அறிந்திடுவீர்
பொய்மைதனை நீக்கிடவே
பொறையின்றி கற்றிடுவீர்
உய்வதற்கு முன்னாலே
உயர்வுநிலை எட்டிடுவீர்
கண்ணிற்குத் தெரியாத
கடவுளர்கள் கற்சிலையில்
மண்ணிலே உலவிவரும்
மகத்துவத்தை அறிவீரோ
அன்பே சிவமென்றால்
அறிவன்றோ தெய்வமாகும்
முன்பதனை வழிமொழிந்து
மூத்தவர்கள் சொல்லிவைத்தார்
அன்பினாலே அனுதினமும்
ஆலயங்கள் செல்வோரே
பண்பதனை அறிந்திடவே
பாடசாலை சென்றிடுவீர்
மலர்விட்டு மலர்தாவி
மகரந்தம் தனைநீவி
உலர்வதற்கு முன்னாலே
உள்கூட்டில் சேர்த்திடுமாம்
சிறுதேனி ஆனாலும்
சிந்தையெல்லாம் தினந்தேடல்
ஒருநாளும் சோர்வுயில்லை
ஒலித்திடுமே குறும்பாடல்
ஈயாத தேட்டையெல்லாம்
தீயவர்கள் கொள்வாராம்
ஈவதற்கு இங்குண்டு
இயன்றவர்கள் எடுத்திடுவீர்
திரட்டிவைத்த தேன்கூடாய்
திரவியங்கள் பலவுமுண்டு
புரட்சிகளின் வரலாறும்
புதையலாக இங்குண்டு
அறிவையெல்லாம் அடைகாக்கும்
ஆலயத்தைக் கண்டிடுவீர்
அறிந்தவர்கள் அதன்சிறப்பை
அனைவருக்கும் சொல்லிடுவீர்
புறமெல்லாம் நூற்பதற்கு
பூவுலகில் கோடியுண்டு
அகமதனை நூற்பதற்கு
நூலகமே தேவைஇன்று
அர்சனைகள் இங்குஇல்லை
அபிசேகம் தேவையில்லை
அனுமதியாய் சிறப்புச்சீட்டு
அலுவலர்கள் தருவதில்லை
சாதிமத பேதமில்லை
சடங்குகளும் நடப்பதில்லை
நீதிஒன்றே சாமிஇங்கு
நிந்தனைகள் ஏதுமில்லை
மதங்கள்கூட தடையுமில்லை
மனிதநேயம் சுடவுமில்லை
உதயமதை வேண்டுவோர்கள்
உளமுடனே சென்றிடலாம்
ஆலயமும் தொழுவதென்றால்
அதுவன்றோ சாலமாகும்
நூலகமும் ஆலயமே
நூல்படிக்கச் செல்லலாமா .
தீக்குச்சி .
குப்பைத்தொட்டி .
பார்வை .

கொங்கை வனப்பதனில்
கோடிஇன்பம் கண்டிருந்தேன்
முல்லை இவளல்லோ
மோகத்தீ மூட்டினாளே
கள்ளைக் குடித்ததுபோல்
கலவிடவே ஆவல்கொண்டேன்
தொல்லை கொடுத்தாளே
தொலைவில் அவள் இருந்தாலும்
நெல்லைத் தூற்றியதால்
பறந்துவந்த பதரதுவும்
வெள்ளை விழியதனை
வேதனையில் ஆழ்தியதே
பிள்ளைப் பாலூற்ற
பிரிந்திடுமாம் வலியெல்லாம்
பல்லை இளித்துநானும்
பார்த்த அந்தப்பார்வையெல்லாம்
எல்லை தாண்டிடவே
எதார்த்தம் விளங்கியது .
செவ்வாய், 18 அக்டோபர், 2011
தி(தெ)ருவோடு.

உள்ளாட்சித் தேர்தலுக்காய்
ஊர்வலமாய் வந்தோம்க
நல்லாட்சி தந்திடுவோம்
நிச்சயமாய் நம்பிடுங்க
பல்லிளிச்சுப் போயிடாம
பணமும்கூட தந்திடுவோம்
கள்ளுக்கடைப் பக்கம்வந்தா
கறியும்சோறும் போட்டுருவோம்
காசுபணம் வேண்டாமென்றால்
கமுக்கமாகச் சொல்லிடுங்க
ஏசிகூட வாங்கித்தாறோம்
ஏழைஎன்னை நம்பிடுங்க
உங்களுக்காக உழைக்கவந்த
உத்தமன பாருங்க
எங்களுக்கு நீங்களன்றி
யாரிருக்கா சொல்லிடுங்க
அஞ்சுவருசம் முன்னாடி
அம்மாதாயே பார்த்ததுங்க
நெஞ்சத்தொட்டு சொல்றேங்க
ஞாபகமும் வச்சுக்கோங்க
பொன்னான ஓட்டமட்டும்
பொழுதோட போட்ருங்க
அண்ணனோட அருமைச்சின்னம்
தி(தெ)ருவோட்ட மறக்காதிங்க .
செவ்வாய், 12 ஜூலை, 2011
செவ்வாய், 5 ஜூலை, 2011
கடன்

கடன்பட்டான் நெஞ்சம்போல
உடன்பட்ட கம்பனுக்கு
குடமுடைத்து குழந்தைவரும்
காலம்தொட்டு மனிதரெல்லாம்
வடம்பிடித்து இழுத்திடுவர்
தாய்கொடுத்த பால்கடனும்
தந்தையிடம் நூல்கடனும்வாய்விட்டு கேட்டிடாத
பொய்யான இவ்வுடலை
உடன்பிறந்த கடனாக
திடம்கொண்டு சிக்கனமாய்
பரலோகம் தொட்டவரும்
கடனென்றால் அஞ்சிடுவர்
கைகூப்பிக் கெஞ்சிடுவர்
விடமென்றால் என்னவென்று
வினவிடுவர் எல்லோரும்
கடன்பட்டு மீண்டிடுவீர்
கண்ணுறக்கம் கொண்டிடுவீர்.
திங்கள், 7 பிப்ரவரி, 2011
அமைதியில் குருமகான் .

தும்பைப் பூஉடையில்
தூயவராய் உலவிடுவார்
இம்மை மறுமைக்கும்
இலக்கணங்கள் சொல்லிடுவார்
அம்மை அப்பரவர்
ஆட்கொண்ட அருள்மலையில்
நம்மைக் காத்திடவே
நடமாடும் அவதாரம்
ஏழகவை நாளதனில்
ஏற்றுக்கொண்ட தீட்சையினால்
பூவுலகை மாற்றவந்த
புனிதமான குருவருளே
வெள்ளைத் தாமரையில்
வீற்றிருக்கும் கலைமகளின்
பிள்ளை வடிவாகிப்
பிறந்துவந்த பெருவருளே
முல்லைக் கொடிபோல
முகிழ்த்துவந்த வெண்மதியே
தில்லை அம்பலத்தில்
திளைத்துவந்த நிம்மதியே
மானுடத்தின் மகத்துவத்தை
மண்ணுலகில் காத்திடவே
கானகத்தில் குடிலமைத்த
கருணைமிகு இறையருளே
வானகத்துத் தேவர்களும்
வந்துலவும் பொதிகைமலை
தேனருவி துள்ளிவிழும்
தென்கயிலை மூர்த்திமலை
அத்தரி மகரிசியும்
அனுசுயா தேவியரும்
இத்தரையில் நடம்புரிந்த
இடமெனவே அறிந்ததினால்
சித்தமெல்லாம் சிவயோகம்
சிந்தையெல்லாம் தவயோகம்
உத்தமமாய் உறைந்திடவே
உருவெடுத்த பிரணவாலயம்
அகிலமெல்லாம் மையல்கொண்ட
திருவருளே அமைதியாகும்
மகிமைகொண்ட பரஞ்சோதி
மாமுனியின் வடிவாகும்
கருணைமிகு தத்துவங்கள்
கடலளவு கொண்டபோதும்
அருமைமிகு தவயோகி
அமைதியான திருஉருவம்
பரிணாம மாற்றத்தில்
படைப்புகளும் மாறிடுமாம்
புரியாமல் பூவுலகை
புடம்போட நேரிடுமாம்
சுயநலமாய் மனிதமனம்
சுருங்கிவிட்ட நாள்முதலாய்
கயமையினால் பாவங்களை
கணக்கில்லாமல் செய்துவித்தார்
நிலம்அழித்து நீர்அழித்து
நிலவுலகின் வளம்அழித்து
குலம்அழித்து குணம்அழித்து
கொடுமைகளில் தினம்திளைத்து
மதியிழந்து மாந்தரெல்லாம்
மாண்டுபோகும் வேளையிலே
விதிப்பயனாய் விண்ணுலகின்
வேதமகன் வருவாராம்
தவப்பயனாய் வந்துதித்த
தகத்தகாய கதிரவனாய்
இவர்பிறந்தார் இருள்விலக
ஈரோட்டு நாயகனாய்
இறைமறுத்த முற்பிறப்பும்
இவரன்றி யாரறிவார்
குறையேதும் இல்லாத
குன்றாத இப்பிறப்பு
உலகமெல்லாம் அமைதிவேண்டி
உடுமலையின் உயரம்தாண்டி
கலகமெல்லாம் களையவேண்டி
காட்சிதந்த மலையாண்டி
பூவுலகம் சாந்திகாண
புனிதமாக அவதரித்து
நோவுகளை நீக்கிடவும்
நோன்பிருந்து அமைதிகாத்தார்
பந்தபாசம் அற்றபோதும்
பாமரரின் நிலையெண்ணி
சந்தோசம் எனும்சொல்லை
சகலருக்கும் சொல்லிவைத்தார்
கொந்தளிக்கும் எரிமலையும்
குளிர்ந்துவிடும் தென்றலென
சந்திரனார் வாக்கினிலே
சத்தியமும் வென்றதென்ன
நதிகளெல்லாம் ஒன்றிணைய
நவின்ற ஒருசொல்லினாலே
சதிகளெல்லாம் உடைத்தெறிந்து
சட்டங்களும் பிறந்ததென்ன
போர்புரிந்து பூவுலகம்
புதைந்தொழிந்து போகும்வேளை
பார்விரிந்து பசுமைகாண
பசுந்தளிர்கள் நட்டுவைத்தார்
யாகமென்னும் வேள்விதனை
யாவருக்கும் நலங்கள்வேண்டி
தாகமென்னும் தவவேள்வி
தவறாமல் இயற்றிவந்தார்
உண்மைநிலை என்னவென்று
உணர்ந்திடுவீர் மானுடமே
வெண்மையான திருவடியை
விரைந்துவந்து பற்றிடுவீர்
உலகமெல்லாம் சமாதானம்
ஓங்கியதோர் சன்னிதானம்
நலமெல்லாம் பெருகவேண்டி
நாடிவந்தால் மோட்சம்கிட்டும்
ஆர்பரிக்கும் அலைகடலும்
ஆழத்திலே அமைதிகொள்ளும்
பார்வையிலே அமைதிபூண்ட
பரஞ்சோதி உலகைவெல்லும்
வெள்ளி, 21 ஜனவரி, 2011
வீரத்தைப் போற்றிடுவோம் .

தென்றலோடு தேன்கலந்து
தேமதுரத் தமிழ்குழைந்து
மன்றத்திலே கவிபாடும்
மாமதுரைக் கவிஞரிவர்
குன்றிலிட்ட மணிவிளக்காய்
குரலினிலே இடிமுழங்க
நன்றமர்ந்த நாயகரே
நரைத்த இளஞ்சூரியரே
வீரபாண்டித் தென்னவரே
வணக்கமைய்யா முன்னவரே
சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்
செவிமடுக்க அவையோரை
வங்கமண் வளர்த்தெடுத்த
வரலாற்று நாயகனாம்
மங்காதப் புகழ்படைத்த
மாவீரர் நேதாஜி
அடிமையென விலங்குபூட்டி
ஆளவந்த கூட்டத்தின்
அடிமடியைக் கலங்கடித்த
ஆற்றல்மிகு வீரமகன்
தன்மானம் சுயவேட்கை
தளராத செயல்வேகம்
எந்நாளும் போற்றிடவே
எழுந்துவந்த மதியூகம்
வெட்டிபேச்சில் வீண்பேச்சில்
விடியாது என்றெண்ணி
பட்டதெல்லாம் போதுமென்று
பாய்ச்சல்கண்ட வங்கப்புலி
பக்கிங்காம் பளபளக்க
பாரதத்தாய் கண்ணீர்சிந்த
கொக்கரித்துக் கோபங்கொண்டு
கொதித்தெழுந்த கொள்கைவீரர்
பேச்சினிலே புயல்வேகம்
பெருங்கூட்டம் சேரக்கண்டு
மூச்சதனை நிறுத்திடவே
முயன்றவர்கள் தோல்வியுற்றார்
தாய்நாட்டின் விடுதலையை
நாய்களிடமா கேட்பதென்று
சாய்த்திடவே எண்ணியவர்
சரித்திரத்தை மாற்றிவிட்டார்
சிங்கைநகர் சீரமைத்த
சீற்றமிகு படையாலே
சங்கநாத ஒலிஎழுப்பி
சமுத்திரத்தைக் கலங்கடித்தார்
பொங்குதமிழ் மறவரெல்லாம்
புடைசூழ்ந்து பின்தொடர
மங்கையரும் பங்குபெற்ற
மகத்தான யுகப்புரட்சி
இளைஞரெல்லாம் எழுச்சியுற்று
எழுந்துவந்த எரிமலையாய்
அலைஅலையாய் திரண்டுவந்து
அணிவகுத்தப் பெருங்கூட்டம்
மிடுக்கான உடையமைப்பில்
மிரண்டுபோன பகைவரெல்லாம்
நடுக்கமுடன் எதிர்கொண்டு
நாளெல்லாம் போரிட்டார்
வஞ்சகங்கள் ஒன்றுசேர
வாய்ப்புக்காக பின்வாங்கி
துஞ்சாமல் துயிலாமல்
தூரதேசம் சென்றுவிட்டார்
விடியலாகப் பின்னாலே
விடுதலையைப் பெற்றபோதும்
விடிவெள்ளி வீரமதை
விதைநெல்லாய் தூவிச்சென்றார்
இறந்துவிட்டார் என்றெண்ணி
இறுமார்ந்த ஓநாய்கள்
பிறந்துவந்த பிள்ளைதனின்
பெயரதனை அறிவாரோ
வீரனுக்கு மரணமில்லை
வெகுண்டெழுவார் வேலுப்பிள்ளை
பிரபாவதி பெற்றெடுத்து
பேராண்மை பெற்றவரே
மறவாது இவ்வுலகம்
மகத்தான வீரமதை
இறவாத புகழ்வாழ்க
இலங்கையிலும் தமிழ்மீள்க
பஞ்சத்திற்கு அடிபணியும்
பரதேசிக் கூட்டம்போல
வ்ஞ்சகத்தில் வழிதவறி
வாக்களித்துச் சென்றிடாதீர்
கொள்ளையிட்ட பணம்கோடி
கொள்கையெல்லாம் தெருக்கோடி
வெள்ளையனே தேவலடா
விளங்கவில்லை லட்சங்கோடி
ஆட்டுமந்தைக் கூட்டமல்ல
அறிந்திடுவீர் தோழர்களே
நோட்டுவிந்தைக் காட்டினாலும்
நேர்மையுடன் நின்றிடுவீர்
உரிமைக்காக உயிர்நீத்த
உத்தமர்கள் பூமியிது
நரிகலெல்லாம் நாடாண்டால்
நாணிலமும் தாங்காது
அஞ்சாத நெஞ்சத்தின்
அருஞ்சொற்பொருள் அறிந்திடுவீர்
நெஞ்சார வீரத்தை
நேசித்துப் போற்றிடுவீர் .
கவிஞர் .மதுரா .வேள்பாரி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




